செவ்வாய், மார்ச் 01, 2016

குறள் எண்: 0212 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0212}

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு

விழியப்பன் விளக்கம்: முயற்சியை விதைத்து, விளைச்சலாய் ஈட்டிய செல்வங்களின் குறிக்கோள்; ஒப்புரவு பழகி, தேவைப்படுவோர்க்கு உதவிடுவதே ஆகும்.
(அது போல்...)
மனிதத்தை உணர்ந்து, விருட்சமாய் வளர்ந்த மனிதர்களின் கடமை; பொதுநலம் கொண்டு, நலிந்தோரை உயர்த்துவதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக