திங்கள், மார்ச் 07, 2016

குறள் எண்: 0218 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0218}

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

விழியப்பன் விளக்கம்: பிறவிக் கடமையறிந்த பகுத்தறிவாளர், வருமானம் குறைந்த காலத்திலும்; ஒப்புரவின் சிறப்புணர்ந்து, உதவி செய்திட சோர்வடையார்.
(அது போல்...)
அறத்தின் வலிமையறிந்த ஊடகவியலாளர், தரவரிசை தாழ்ந்த நிலையிலும்; ஊடகத்தின் தர்மமுணர்ந்து, வாய்மையைத் தொடர தளர்வடையார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக