வெள்ளி, மார்ச் 11, 2016

ஹியூமென்ஸோட "நேம்ஸ" வச்சி ஒரு ஹியூமர் "சென்ஸு"!!!


{அடிக்கடி, என் நட்புகள் சிலர் பேரை வச்சி கலாய்ப்பதுண்டு! அதை வைத்து ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியது; அதான், இந்த "ஹா... ஹா... ஹா..."}


      "கார்த்தி" கிட்ட உனக்கு "கீர்த்தி" இருக்காப்பான்னு கேட்க; அவன் சம்பந்தமே இல்லாம "ஃபிரஷ்ஷா" இருக்க "சுரேஷ்ஷ" பார்த்து இப்படி கேட்பியான்னுட்டான்.  அதுக்கு, சுரேஷ்ஷு ஏன் என்னை மட்டும்?; எப்ப பார்த்தாலும் "கெத்து" காட்டறானே "முத்து", அவனைக் கேட்க சொல்லு பார்ப்போம் என்றான். அப்போது, தன்னோட "பிம்பத்"தோட அங்க வந்தான் "சம்பத்". எல்லாத்தையும் நம்ம டெர்ரர் "கிரி" வழக்கம்போல ஒரு "வெறி" யோட பார்த்துக்கிட்டு இருந்தான்; அதைப் பார்த்த நம்ம "அருள்" எப்பவும் போல "பொருள்" ஏதும் இல்லாம பேச ஆரம்பிச்சுட்டான். இதையெல்லாம் "முரளி" பெரிய "புரளி" யா கிளப்பிவிட; நம்ம "பாலா" அதை ரொம்ப "கூலா" கேட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க, உடனே "கண்ணா" ஏன் "அண்ணா" இப்படி சிரிக்கறன்னு கேட்டாப்ல. அந்த நேரம் பார்த்து அங்க வந்த சின்ஸியர் "சரவணன்" திடீர் "ராவணன்" மாதிரி லுக் விட்டுட்டு; என்னாங்கடா நடக்குது இங்கன்னான் கோபமாய்! எல்லாத்தையும் சாமியார் போல  அமைதியா பார்த்துக்கிட்டு இருந்தான் "ராகு" திசை நடக்கற "ரகு". அப்போ... லொக்கு/லொக்குன்னு சத்தம் கேட்க; என்ன ஆச்சு "நிர்மல்"னு கேட்டா, "இருமல்"னு சொன்னாப்ல. நடந்துக்கிட்டு இருக்கற எதையும் கண்டுக்காம பெரிய "காட்ரேஜ்" பீரோவுல எதையோ தேடிக்கிட்டு இருந்தாப்ல "நடராஜ்". 

      இதை இப்படி காமெடியா உங்களுக்கு சொல்லிக்கிட்டு இருப்பது “கிங்கா”ன இந்த “இளங்கோ”ன்னு சொன்னா - அதுக்கு, நீங்க - போடா “மாங்கா”ன்னு சொல்லி சிரிக்கக்கூடாது! ஆமாம், சொல்லிப்புட்டேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக