வியாழன், மார்ச் 10, 2016

குறள் எண்: 0221 (விழியப்பன் விளக்கவுரை)


{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0221}

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து

விழியப்பன் விளக்கம்: திரும்ப கொடுக்க முடியாதோர்க்கு, கொடுப்பதே உண்மையான ஈகையாகும்; மற்றவையெல்லாம் எதிர்பார்ப்பு தன்மை உடையனவாகும்.
(அது போல்...)
எதிர்த்து தாக்க முடியாதவர்க்கு, அளிப்பதே உண்மையான மன்னிப்பாகும்; பிறவெல்லாம் பயம் நிறைந்த தன்மையானவை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக