வியாழன், மார்ச் 03, 2016

குறள் எண்: 0214 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0214}

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவு எனும் அறத்தையொத்து வாழ்வோரே, உயிரோடு வாழ்வோர் ஆவர்; மற்றவரெல்லாம் இறந்தவர்களில் ஒருவராய் மதிக்கப்படுவர்.
(அது போல்...)
நடுநிலை எனும் ஒழுக்கமுடன் பாராட்டுவோரே, உண்மையாய் பாராட்டுவோர் ஆவர்; பிறரெல்லாம் தூற்றுவோரில் ஒருவராய் அறியப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக