வியாழன், மார்ச் 17, 2016

குறள் எண்: 0228 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0228}

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

விழியப்பன் விளக்கம்: தம்முடையதென சேமித்து, செல்வத்தை இழக்கும் இரக்கமற்றோர்; கொடுப்பதால் விளையும், பேரின்பத்தை அறியாரோ?
(அது போல்...)
தன்மானமென வாழ்ந்து, வாழ்க்கையை இழக்கும் இனவெறியர்கள்; மனிதத்தால் கிடைக்கும், உயர்வை உணராரோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக