வியாழன், மார்ச் 24, 2016

குறள் எண்: 0235 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0235}

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

விழியப்பன் விளக்கம்: புகழ் பெற்ற செயல்களைச் செய்யும் திறமையானோர் தவிர, மற்றவர்களுக்கு; "சங்கு"போல் - உடலிழந்த பின்னும், நிலைத்து வாழ்வது சாத்தியமில்லை.
(அது போல்...)
மனிதம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அன்பர்கள் தவிர்த்து, பிறர்க்கு; "தந்தம்"போல் - உறவைப் பிரிந்தும், உயர்ந்து மதிக்கப்படுவது  எளிதல்ல.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக