வெள்ளி, மார்ச் 18, 2016

குறள் எண்: 0229 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0229}

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்

விழியப்பன் விளக்கம்: சேமிப்புக் கிடங்கில் நிரப்பியவற்றை, தாமே தனியாக உண்ணுதல்; பிறரிடம் யாசிப்பதை விட, மிகவும் கொடுமையானது.
(அது போல்...)
மனதின் ஆழத்தில் தேங்குபவற்றை, தனக்குள்ளே மறைத்து வைப்பது; பிறரின் பகையை விட, மிகவும் ஆபத்தானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக