சனி, மார்ச் 26, 2016

குறள் எண்: 0237 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0237}

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

விழியப்பன் விளக்கம்: புகழுடன் வாழமுடியாத மனிதர்கள், தம்மையே கடிந்து கொள்ள வேண்டும்! மாறாய்; தம்மை விமர்சிக்கும் மனிதர்களை, கடிந்துகொள்வதில் என்ன காரணம் இருக்கிறது?
(அது போல்...)
மக்களாட்சியை நிறுவமுடியாத தலைவர்கள், தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டும்! அதை விடுத்து; தம்மை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை, தண்டிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக