சனி, மார்ச் 19, 2016

குறள் எண்: 0230 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0230}

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை

விழியப்பன் விளக்கம்: இறப்பதை விட துன்பம் ஏதுமில்லை! ஆனால், இரப்பவர்க்கு கொடுக்க முடியாத இயலாமையில் - இறத்தலும் மகிழ்ச்சியாகும்.
(அது போல்...)
தற்கொலையை விட கோழைத்தனம் ஏதுமில்லை! ஆனால், சரணடைந்தோரை மன்னிக்க முடியாத சூழலில் - தற்கொலையும்  வீரமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக