ஞாயிறு, மார்ச் 13, 2016

குறள் எண்: 0224 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0224}

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

விழியப்பன் விளக்கம்: கேட்கப்பட்டதைக் கொடுத்து, கேட்டவர் முகம் மலர்வதைக் காணும்வரை; கொடுக்காமல் காத்திருக்கும் நேரத்தில், கேட்டவருக்காக இரக்கப்படுவது நீடிக்கும்.
(அது போல்...)
நடந்ததை விவாதித்து, நடந்ததற்காக மனசாட்சியின் தீர்ப்பைப் பெறும்வர; விவாதிக்காமல் இருக்கும் இடைவெளியில், நடந்ததற்காக வருந்துவது நீடிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக