செவ்வாய், மார்ச் 08, 2016

குறள் எண்: 0219 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0219}

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு

விழியப்பன் விளக்கம்: செய்யவேண்டிய உதவிகளை, செய்யமுடியாத சூழ்நிலை நேர்ந்தால் மட்டுமே; ஒப்புரவை உணர்ந்து உதவும் நற்குணத்தார், வறுமையுடையோர் ஆவர்.
(அது போல்...)
அளிக்கப்பட்ட கடமைகளை, எவரேனும் ஆற்றவிடாது தடுத்தால் மட்டுமே; நேர்மையைக் கடைப்பிடித்து பணிபுரியும் நல்-அலுவலர்கள், திறமையற்றோர் ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக