புதன், மார்ச் 16, 2016

குறள் எண்: 0227 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0227}

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

விழியப்பன் விளக்கம்: உணவைப் பகிர்ந்து உண்ணும், அறநெறியைப் பழகியவரை; பசியெனும் கொடுநோய், வருத்துவது சாத்தியமில்லை.
(அது போல்...)
கற்றதைப் புரிந்து கற்பிக்கும், திறமையை உடையவரை; கர்வமெனும் மனநோய், சிதைப்பது அரிதானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக