ஞாயிறு, மார்ச் 06, 2016

குறள் எண்: 0217 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0217}

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவோடு உதவிகளைப் பகிரும், பெருந்தகை பெற்ற செல்வம்; எல்லாப் பாகங்களாலும், மருந்தாகத் தவறாத மரத்தைப் போன்றதாகும்.
(அது போல்...)
அறமுடன் இல்லறத்தை நடத்தும், பெற்றோர்க்குப் பிறக்கும் பிள்ளைகள்; எல்லா வகையிலும், பயனளிக்கத் தவறாதக் கல்வியைப் போன்றவராவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக