செவ்வாய், மார்ச் 29, 2016

குறள் எண்: 0240 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0240}

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

விழியப்பன் விளக்கம்: புகழ் இல்லாததால் விளையும், பழியை ஒழித்து வாழ்வோரே - வாழ்க்கைப் பயனடைந்தோர் ஆவர்; புகழை ஒழித்து வாழ்வோர், வாழ்க்கைப் பயனடையாதவர் ஆவர்.
(அது போல்...)
அறம் இல்லாததால் நிகழும், தீமையை விலக்கி பயணிப்போரே - சமுதாயத்தை உயர்த்துவோர் ஆவர்; அறத்தை விலக்கி பயணிப்போர், சமுதாயத்தை உயர்த்தாதவர் ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக