ஞாயிறு, மார்ச் 27, 2016

குறள் எண்: 0238 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0238}

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

விழியப்பன் விளக்கம்: தம் ஆயுள் காலத்திற்குப் பின், நிலைத்திருக்கும் புகழைப் பெறவில்லை எனில்; அதுவே - புவியுலகில் வாழ்வோர் எல்லோர்க்கும், உண்மையான பழியாகும்.
(அது போல்...)
தம் ஆட்சிக் காலத்திற்குப் பின், தொடர்ந்திடும் நேர்மையை நிலைநாட்டவில்லை எனில்; அதுவே - பொதுவாழ்வில் உள்ளோர் எல்லோர்க்கும், உண்மையான தோல்வியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக