வெள்ளி, மார்ச் 04, 2016

குறள் எண்: 0215 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0215}

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

விழியப்பன் விளக்கம்: ஒப்பரவு உணர்ந்த பகுத்தறிவாளரின் செல்வம் - பேதங்கள் ஏதுமின்றி, ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படும் குளத்துநீரைப் போன்று - பொதுவானது.
(அது போல்...)
தன்னிலை அறிந்த குருவொருவரின் ஞானம் - பகிர்வதில் பேதமின்றி, ஆன்மாக்கள் அனைத்திற்கும் ஒளிர்ந்திடும் கதிரவனைப் போல் - சமமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக