வெள்ளி, மார்ச் 11, 2016

குறள் எண்: 0222 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0222}

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

விழியப்பன் விளக்கம்: நல்நெறியே என்றாலும், பிறரிடமிருந்து பெறுவது தீமையானது; விண்ணுலகத்திற்கு இட்டுச் செல்லாது எனினும், ஈதலே நன்றானது.
(அது போல்...)
உலகையே வென்றாலும், பிறர்மேலான சர்வாதிகாரம் கோழைத்தனமானது; சிற்றூரை வென்றிட இல்லை எனினும், அஹிம்சையே வீரமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக