சனி, மார்ச் 05, 2016

குறள் எண்: 0216 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0216}

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவெனும் சமத்துவம் உனர்ந்து, நன்மை செய்வோர் பெற்ற செல்வம்; ஊரின் நடுவே,  பயன்தரும் மரம் பழுத்திருப்பதைப் போன்றதாம்.
(அது போல்...)
பொதுநலமெனும் மேன்மை அறிந்து, பொதுச்சேவைச் செய்வோர் வகிக்கும் பதவி; மக்களின் மனதில், இழந்துபோன நம்பிக்கையை வளர்ப்பது போன்றதாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக