சனி, மார்ச் 12, 2016

குறள் எண்: 0223 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  023 - ஈகைகுறள் எண்: 0223}

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள

விழியப்பன் விளக்கம்: இல்லையெனும் நிலையை வெளிப்படுத்தாமல், தேவையானோர்க்கு கொடுக்கும் பண்பு; நல்லொழுக்கம் நிறைந்த குடும்பத்தாரிடம் இருக்கும்.
(அது போல்...)
பாவமெனும் புறங்கூறுதலைச் செய்யாமல், உறவுகளை நேசிக்கும் திண்ணம்; சுயத்தைக் காதலிக்கும் மனிதர்களிடம் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக