திங்கள், மார்ச் 28, 2016

குறள் எண்: 0239 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0239}

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம்

விழியப்பன் விளக்கம்: புகழில்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமப்பதால், ஒப்பற்ற புவியானது; பழியில்லாமல் பெரும்பயன் அளிக்கும், தன் தன்மையிலிருந்து குறையும்.
(அது போல்...)
நீதியில்லாமல் ஆள்பவரின் ஆட்சியை ஆதரிப்பதால், இணையற்ற மக்களாட்சியானது; தீதில்லாமல் பொதுநலம் காக்கும், தன் நிலையிலிருந்து மாறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக