திங்கள், அக்டோபர் 31, 2016

குறள் எண்: 0456 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0456}

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

விழியப்பன் விளக்கம்: தூய்மையான மனமுடையவரின் வம்சம், நல்வழியில் பயணப்படும்; தூய்மையான இனத்தைக் கொண்டவரின் செயல்கள், நன்மையளிக்காமல் இருப்பதில்லை.
(அது போல்...)
குறையற்ற ஆட்சியின் நீட்சி, நல்லவர்களால் தொடரப்படும்; குறையற்றத் தொண்டர்களை உடையோரின் கட்சி, வெற்றியடையாமல் இருப்பதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக