சனி, ஏப்ரல் 01, 2017

குறள் எண்: 0608 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0608}

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்

விழியப்பன் விளக்கம்: குடிமக்களிடம், சோம்பல் எனும் அழிவுக்காரணி சேர்ந்தால்; அவர்களின் பகைவர்களுக்கு, அடிமையாய் இருக்குமாறு செய்துவிடும்.
(அது போல்...)
குடும்பத்தாரிடம், ஆதிக்கம் எனும் குற்றக்காரணி சேர்ந்தால்; அவர்களின் தீக்குணங்களுக்கு, சேவகராய் இருக்குமாறு செய்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக