செவ்வாய், ஏப்ரல் 11, 2017

குறள் எண்: 0618 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0618}

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

விழியப்பன் விளக்கம்: ஐம்பொறிகளை அடக்கிடும் திறமையின்மை, எவருக்கும் பழியாகாது! ஆனால் தேவையானவற்றை அறிந்து; வினைகளை செய்யும் திறமையின்மை, எவருக்கேனும் பழியாகும்!
(அது போல்...)
ஐம்பூதங்களை அறிந்திடும் ஞானமின்மை, ஒருவருக்கும் குறையாகாது! ஆனால் தேவையானோரை அலசி; உறவுகளை வளர்க்கும் ஞானமின்மை, எல்லோருக்கும் குறையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக