ஞாயிறு, ஏப்ரல் 02, 2017

குறள் எண்: 0609 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0609}

குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

விழியப்பன் விளக்கம்: சோம்பலின் ஆளுமையை, மாற்றி முறியடித்தால்; ஆளுமையுள்ள குடிமக்களின் மனதில், குடிகொண்ட குற்ற உணர்வுகள் கெட்டழியும்.
(அது போல்...)
பகையின் ஆணிவேரை, அறுத்து அழித்துவிட்டால்; வம்சத்திலுள்ள உறவுகளின் சிந்தனையில், கலந்திட்ட துரோகச் செயல்கள் மறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக