திங்கள், ஏப்ரல் 10, 2017

குறள் எண்: 0617 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0617}

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்

விழியப்பன் விளக்கம்: சோம்பல் உடையோரிடம், இருள்நிறைந்த மூதேவி இருப்பாள் என்றும்; சோம்பல் இல்லாதோரிடம், ஒளிமிகுந்த திருமகள் இருப்பாள் என்றும் சொல்வர்.
(அது போல்...)
தீயொழுக்கம் நிறைந்தோரிடம், பகைநிறைந்த அசுரன் இருப்பான் என்றும்; நல்லொழுக்கம் நிறைந்தோரிடம், குணம்மிக்க இந்திரன் இருப்பான் என்றும் சொல்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக