வியாழன், ஏப்ரல் 06, 2017

குறள் எண்: 0613 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0613}

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: முயற்சி செய்தல் என்னும் உயர்வான குணம் உடையவர்களிடம்; உதவி செய்தல் என்னும் மேன்மையான உணர்வு நிலைத்திருக்கும்.
(அது போல்...)
அன்பைப் பகிர்தல் என்னும் சிறப்பான இயல்பை உடையவர்களிடம்; மனிதத்தைக் காத்தல் என்னும் உண்மையான அடிப்படை மிகுந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக