வெள்ளி, ஏப்ரல் 07, 2017

குறள் எண்: 0614 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0614}

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: முயற்சியென்னும் உயர்குணம் இல்லாதோரின், உதவி செய்யும் உணர்வு; கோழையானோர் தம் கையில் வாளெடுத்து, சுழற்றுவது போல் விரயமாகும்.
(அது போல்...)
அன்பைப் பகிரும் இயல்பாற்றோரின், மனிதம் காக்கும் அடிப்படை; சுயநலமானோர் தம் தலைமையில் வென்று, அரசாள்வது போல் அழிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக