சனி, ஏப்ரல் 08, 2017

குறள் எண்: 0615 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0615}

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் ஈடுபட விரும்பாமல், செயலில் ஈடுபட விரும்புவோர்; தம் சுற்றத்தின் துன்பங்களைத் துடைத்து, அவர்களைத் தாங்கும் தூணாக இருப்பர்.
(அது போல்...)
சுயநலத்தில் நாட்டம் கொள்ளாமல், பொதுநலம் காத்திட முனைவோர்; தம் சமுதாயத்தின் குறைகளைக் களைந்து, அவர்களை வழிநடத்தும் கர்மவீரராக இருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக