செவ்வாய், ஏப்ரல் 25, 2017

குறள் எண்: 0632 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0632}


வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

விழியப்பன் விளக்கம்: அச்சமற்ற கண்கள், குடிமக்களைக் காத்தல், அறம் கற்றல், கற்றவற்றை ஆய்ந்தறிதல், வினைகளை முடித்தல் - ஆகிய ஐவகை காரணிகளுடன் இருப்பதே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
குற்றமற்ற எண்ணங்கள், பிள்ளைகளை வளர்த்தல், பெற்றோரைப் போற்றுதல், போற்றியவரைப் பேணுதல், பாரம்பரியம் காத்தல் - ஆகிய ஐந்து இயல்புகளுடன் வாழ்வதே இல்லறம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக