புதன், ஏப்ரல் 12, 2017

குறள் எண்: 0619 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0619}

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

விழியப்பன் விளக்கம்: ஊழ்வினை காரணமாய், இறைவனால் உதவமுடியாது எனினும்; உடலை வருத்தி செய்யப்படும் முயற்சி, அதற்கிணையான சன்மானத்தை வழங்கும்.
(அது போல்...)
மனப்பிணக்கு காரணமாய், உறவுகள் உதவிடாமல் போனாலும்; உண்மையை முன்னிறுத்திக் கொள்ளும் நம்பிக்கை, அதற்குரிய பலனைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக