புதன், ஏப்ரல் 19, 2017

குறள் எண்: 0626 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0626}

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: இருக்கும்போது, பெற்றிருக்கிறோம் என்ற சுயநலத்துடன், செல்வத்தைக் காக்காதோர்; அவற்றை இழந்தபோது, இழந்துவிட்டோம் என்று இன்னல் படுவரோ?
(அது போல்...)
வென்றபோது, வென்றுவிட்டோம் என்ற கர்வத்துடன், தோற்றவரை இகழாதோர்; தோல்வியைத் தழுவியபோது, தோற்றுவிட்டோம் என்று வருத்தம் அடைவரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக