வெள்ளி, ஏப்ரல் 14, 2017

குறள் எண்: 0621 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0621}


இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்

விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் நேர்ந்தால், அவற்றை ஒதுக்கி மகிழவேண்டும்; இன்னல்களைக் கடக்க உதவுவதில், அம்மகிழ்சிக்கு இணையானது வேறேதுமில்லை.
(அது போல்...)
உறவுகள் பிரிந்தால், அதை மதித்து மறக்கவேண்டும்; உறவுகளின் பிரிவைக் கடப்பதில், மறதிக்கு ஒப்பானது எதுவுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக