திங்கள், ஏப்ரல் 03, 2017

குறள் எண்: 0610 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0610}

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

விழியப்பன் விளக்கம்: உலகத்தைத் தன் பாதத்தால் அளந்தவன், கடந்த எல்லா பரப்பளவுகளையும்; சோம்பல் இல்லாத அரசாள்பவர், ஒருசேர வாகைசூடுவர்.
(அது போல்...)
வம்சத்தை தம் உழைப்பால் உயர்த்தியோர், அடைந்த எல்லா சிறப்புகளையும்; சுயநலம் இல்லாத பிள்ளைகள், ஒன்றிணைய அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக