வியாழன், ஏப்ரல் 20, 2017

குறள் எண்: 0627 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0627}

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

விழியப்பன் விளக்கம்: "உடம்பு என்பது துன்பத்திற்கு உள்ளாவதே!" என்பதை உணர்ந்து; சான்றோர்கள், துன்பத்திற்காகக் கலங்குவதை வழக்கமாக கொள்ளமாட்டார்கள்.
(அது போல்...)
"அரசியல் என்பது துரோகத்துக்கு ஆட்பட்டதே!" என்பதைப் புரிந்து; கர்மவீரர்கள், துரோகத்துக்காகப் பின்வாங்குவதைக் காரணமாக சொல்லமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக