வெள்ளி, ஏப்ரல் 21, 2017

குறள் எண்: 0628 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0628}

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், துன்பத்தை இயல்பென்போர்; துன்பத்தை எதிர்கொள்வதற்காக, தம் மனத்திடத்தை இழக்கமாட்டார்கள்.
(அது போல்...)
விதிமீறலில் விருப்பம் இல்லாமல், விதிகளை அவசியமென்போர்; விதிமீறலை மேற்கொள்வதற்காக, தம் ஒழுக்கத்தை சிதைக்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக