புதன், ஏப்ரல் 05, 2017

குறள் எண்: 0612 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0612}

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளில், அவ்வினைகள் தடைபட செயல்படுவது; வினைகளை முடிக்காமல் கைவிட்டதற்காக, அவர்களை உலகத்தார் கைவிட வழிவகுக்கும்.
(அது போல்...)
கிடைத்திட்ட பிறப்பில், அப்பிறப்பு பயனின்றி வாழ்வது; பிறப்பின் பயனடையாது தோற்றதற்காக, அவர்களை சுற்றத்தார் தாழ்த்திட வித்திடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக