ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

குறள் எண்: 0616 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0616}

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

விழியப்பன் விளக்கம்: முயற்சியைக் கைவிடாமல் செய்யப்படும் வினைகள், செல்வத்தைப் பெருக்கும்; முயற்சி இல்லாத தன்மை, இல்லாமையை உருவாக்கி விடும்.
(அது போல்...)
நேயத்தை மறக்காமல் தொடரும் உறவுகள், சமுதாயத்தை வலிமையாக்கும்; நேயம் இல்லாத உறவுகள், தீவிரவாதத்தை வளர்த்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக