சனி, ஏப்ரல் 22, 2017

குறள் எண்: 0629 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0629}

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

விழியப்பன் விளக்கம்: இன்பமான நிகழ்வுகளின் போது, அவ்வின்பத்தால் சுயத்தை இழக்காதோர்; துன்பமான நிகழ்வுகளின் போது, அத்துன்பத்தால் மனத்திடத்தை இழப்பதில்லை.
(அது போல்...)
சாதகமான சூழலின் போது, அச்சாதகத்தால் ஆதாயத்தைத் தேடாதோர்; சிக்கலான சூழலின் போது, அச்சிக்கலால் ஒழுக்கத்தைத் தவறமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக