சனி, ஏப்ரல் 15, 2017

குறள் எண்: 0622 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0622}

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

விழியப்பன் விளக்கம்: மழை வெள்ளத்திற்கு இணையான இன்னல்களும்; அவற்றை சமாளிக்கும் திறமுடையோர், திட்டங்களை மனதில் வகுத்த கணத்திலேயே அழிந்துவிடும்.
(அது போல்...)
சுனாமி அலைக்கு ஒப்பான தீப்பழக்கங்களும்; அவற்றை நீக்கும்  முனைப்புடையோர், மாற்றுகளை சிந்தனையில் நினைத்த உடனேயே செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக