வெள்ளி, பிப்ரவரி 02, 2018

குறள் எண்: 0915 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0915}

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்

விழியப்பன் விளக்கம்: மதியின் தன்மையால், புகழ்பெற்ற அறிவினைப் பெற்றவர்; பொருளளிக்கும் யார்க்கும் பொதுவாகும் தன்மையுடைய விலைமகளிரின், அற்ப சுகத்தைத் தீண்டார்!
(அது போல்...)
அன்பின் அடிப்படையால், உயர்ந்த வாழ்வியலைக் கற்றவர்; பதவியளிக்கும் எவர்க்கும் அடிபணியும் அடிப்படையுடைய அரசியலாரின், தீய ஒழுக்கத்தை விரும்பார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக