ஞாயிறு, பிப்ரவரி 25, 2018

குறள் எண்: 0938 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0938}

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

விழியப்பன் விளக்கம்: தீயொழுக்கமான சூது - பொருளை அழித்து, பொய் சொல்வதை வழக்கமாய் ஆக்கும்! அருளை அழித்து, துன்பத்தை விளைவிக்கும்!
(அது போல்...)
தீப்பழக்கமான ஊழல் - பொதுநலனை அழித்து, சுயநலம் பெருக்குவதை கொள்கையாய் ஆக்கும்! மனிதத்தை அழித்து, கொடுங்கோன்மையை நிலைநாட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக