செவ்வாய், பிப்ரவரி 13, 2018

குறள் எண்: 0926 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0926}

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

விழியப்பன் விளக்கம்: கடமையைத் தவறி உறங்குவோர், இறந்தோரை விட வேறல்லர்! அதுபோல் எந்நாளும் கள் போன்ற திரவம் அருந்துவோர், நஞ்சை அருந்துவோரை விட வேறல்லர்!
(அது போல்...)
உண்மையை மறைத்துப் பேசுவோர், குற்றவாளியை விட வேறல்லர்! அதுபோல் எப்போதும் வஞ்சம் போன்ற தீமை செய்வோர், கொலை செய்வோரை விட வேறல்லர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக