சனி, பிப்ரவரி 17, 2018

குறள் எண்: 0930 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0930}

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவம் அருந்துவோர், கள்ளருந்தாத வேளையில்; கள்ளருந்தி மயங்கியோரைக் காணும்போது, தான் அருந்தியதால் விளைந்த சோர்வை உணரமாட்டாரோ?
(அது போல்...)
ஊழல் போன்ற குற்றம் செய்வோர், தண்டனைப்  பெறாதபோது; ஊழலாடி தண்டிக்கப்பட்டோரைக் காணும்போது, தான் ஊழலாடியாதல் மக்கள் இழந்ததை எண்ணமாட்டாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக