செவ்வாய், பிப்ரவரி 20, 2018

குறள் எண்: 0933 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0933}

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்

விழியப்பன் விளக்கம்: உருட்டுக்கட்டை உருட்டி சூதாடுவதால் கிடைக்கும் வரவை, ஓயாது கூறி சூதாடினால்; பொருளை முதலிடுவதால் கிடைக்கும் வரவு, விலகிப் பிறர்வசம் சேரும்.
(அது போல்...)
பொய்சாட்சி சொல்லி ஏய்ப்பதால் கிடைக்கும் மகிழ்வை, தொடர்ந்து விரும்பி ஏய்த்தால்; மெய்யை சொல்வதால் கிடைக்கும் நன்மை, பொய்த்துத் தீமையே விளையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக