திங்கள், பிப்ரவரி 26, 2018

குறள் எண்: 0939 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0939}

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்

விழியப்பன் விளக்கம்: சூது எனும் தீயொழுக்கத்தை விரும்பி மேற்கொள்வோரை - உடை/செல்வம்/உணவு/புகழ்/கல்வி என்னும் ஐந்தும் சேராது!
(அது போல்...)
பகை எனும் தீக்குணத்தை நேசித்துப் பழகுவோரை - உண்மை/நம்பிக்கை/நட்பு/உறவு/பதவி என்னும் ஐந்தும் சேராது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக