வியாழன், பிப்ரவரி 15, 2018

குறள் எண்: 0928 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0928}

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவமருந்தும் பழக்கமிருந்தும், "கள்ளுண்டு அறியேன்" என பொய்ப்பதைக் கைவிடுக! இல்லையேல், நெஞ்சத்தில் மறைத்தது சூழலால் வெளிப்படும்!
(அது போல்...)
ஊழல் போன்ற தீச்செயல்கள் செய்திருந்தும், "ஊழலே செய்ததில்லை" என முழங்குவதைக் கைவிடுக! அன்றேல், திறமையாய் செய்தது வாய்மையால் வெளிப்படும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக