வெள்ளி, பிப்ரவரி 09, 2018

குறள் எண்: 0922 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0922}

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற போதைத் திரவங்களை அருந்தாதீர்! அருந்தவேண்டும் எனில்; சான்றோரால் உயர்வாய் எண்ணப்பட வேண்டாதோர், மட்டும் அருந்துக!
(அது போல்...)
இலஞ்சம் போன்ற ஊழல் காரணிகளை  விதைக்காதீர்! விதைக்கவேண்டும் எனில், சமுதாயத்தால் சிறப்பாய் மதிக்கப்பட வேண்டாதோர், மட்டும் விதைக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக