வெள்ளி, பிப்ரவரி 23, 2018

குறள் எண்: 0936 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0936}

அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்

விழியப்பன் விளக்கம்: சூது என்னும் மூதேவியால் அடக்கியாளப் பட்டோர்; உணவை இழப்பதால், வயிறு நிறையார்! நிம்மதியை இழப்பதால், துன்பத்திற்கும் ஆட்படுவர்!
(அது போல்...)
பொய் என்னும் அரக்கனால் ஆக்கிரமிக்கப் பட்டோர்; உண்மையை இழப்பதால், மனது நிறையார்! மனிதத்தை மறப்பதால், அழிவுக்கும் உள்ளாவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக