ஞாயிறு, பிப்ரவரி 11, 2018

குறள் எண்: 0924 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0924}

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற பேணக்கூடாவற்றை அருந்தும், பெருங்குற்றம் செய்வோர்க்கு; நாணமெனும் நற்பெண், முகத்தைக் காண்பிக்க அஞ்சி முதுகைக் காண்பிப்பாள்!
(அது போல்...)
மதம் போன்ற பிரிவினையை விதைக்கும், பேரழிவை நாடுவோர்க்கு; மனிதமெனும் பெருதெய்வம், அருளை வழங்க மறுத்து சாபத்தை வழங்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக